* சிவில் இன்ஜினியராக ஆர்யாவும், குழந்தை நல மருத்துவராக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.
* அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன், ஆர்யா இணையும் மூன்றாவது படம்.
* படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். இவர்களுடன் ராட்வைலர் என்ற அரியவகை நாயும் நடித்துள்ளது. இது ஒரு ஆளுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடிய குணாதிசயம் உள்ளது.
* ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள படத்திற்கு, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மும்பையில் கிரேடிங் செய்யப்பட்டுள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
* ஒரு பாடல் காட்சியில் முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த தமிழ்ப் படங்களிலும் பார்க்காத வித்தியாசமான அனுபவத்தை இப்பாடல் தருமாம்.
* 80 அடி உயரத்தில் தேவாலய செட் போடப்பட்டு நைட் எஃபெக்டில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாம்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு - நீரவ்ஷா, எடிட்டிங் - ஸ்ரீகர்பிரசாத், கலை - மனுஜகத், ஸ்டண்ட் - தியாகராஜன், பாடல்கள் - பா.விஜய், இசை - யுவன்சங்கர் ராஜா, வசனம் - ராஜ்கண்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் - விஷ்ணுவர்தன், தயாரிப்பு - கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்டியன்.